Thursday, June 4, 2009

விழிகளை விடுதலை செய்தேன்

நள்ளிரவு நித்திரைகளில் ஒரு நாள்!!


குற்றவாளி கூண்டில் அவள்

நீதிபதியாய் நான்,

அவள் வாழ்வின் ஏதேனும் ஒரே ஒரு சந்தர்பத்திலாவுது என்னை காதலித்து, 

இருக்கிறாலா என கேள்வி கேட்டேன்,



கர்வத்துடன் மறுத்தன அவள் உதடுகள்,

அவளுக்காக காத்திருந்த கணங்களை மறந்து கால்கள் இல்லை என்றது,

எத்தனை முறை அவள் பெயரை உச்சரித்து இருப்பேன் ஆனால் அவள் காதுகள்

இப்போதும் கேட்க மறுத்தது,

அவள் கைகள் ஏலனமாய் என்னை புறக்கணித்தது,

ஆனால்

அவள் விழிகள் மட்டும் சிறைக்குள்,

குற்றவாளியாய் நான்.